சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே புறநகர் ரயில்கள் இன்று ரத்து

3 months ago 18

சென்னை: பராமரிப்பு பணி காரணமாக, சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு வழித்தடத்தில் இயக்கப்படும் அனைத்து புறநகர் ரயில்களும் இன்று (அக்.27) காலை முதல் மாலை வரை ரத்து செய்யப்பட உள்ளன.

இதற்கிடையே, தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில், இதுபோன்ற ரயில் சேவை மாற்ற அறிவிப்பை ரயில்வே நிர்வாகம் மேற்கொள்ளக் கூடாது என பயணிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். சென்னை கடற்கரை - எழும்பூர் இடையே 4-வது ரயில் பாதை அமைக்கும் பணிகள் நடைபெறும் நிலையில், கடற்கரை பணிமனையில் இன்று (அக்.27) அதிகாலை 4 மணி முதல் மாலை 5 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.

Read Entire Article