சென்னை: சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசு தரப்பில் ஆஜராகி வாதிட 39 வழக்கறிஞர்களை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் சிறப்பு அரசு ப்ளீடர்களாக இ.வேத பகத்சிங், ஏ.என்.புருஷோத்தம், எஸ்.செந்தில்முருகன், யு.பரணிதரன், சி. ஹர்ஷராஜ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். கே. அஷ்வினிதேவி, ஆர். சித்தார்த், டி.கே.சரவணன், எஸ்.இந்துபாலா, ஆகியோர் கூடுதல் அரசு ப்ளீடர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.