சென்னை : சென்னை எல்லை சாலைத் திட்டத்தின் பகுதி 3 பணியை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். திருவள்ளுர்-ஸ்ரீபெரும்புதூர் வரை 31 கி.மீ. ரூ.2689 கோடி மதிப்பீட்டில் ஆறுவழிச் சாலை திட்டப் பணி தொடங்கப்பட்டது. ஸ்ரீபெரும்புதூர், ஒரகடத்தில் இருந்து துறைமுகம் வரும் கனரக வாகனங்களால் சென்னையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் சென்னை எல்லை சாலைத் திட்டம் தொடங்கப்பட்டது.
The post சென்னை எல்லை சாலைத் திட்டத்தின் பகுதி 3 பணியை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!! appeared first on Dinakaran.