சென்னை உட்பட 15 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

4 months ago 36

சென்னை,

உள் தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வுமையம் தெரிவித்து இருந்தது.

இந்த நிலையில், தமிழகத்தின் 15 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழை பெய்யுமென வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. அதன்படி, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல், கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, குமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, திருவள்ளூர் மற்றும் சென்னை ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யுமன வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

Read Entire Article