சென்னை அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் கூடுதல் மருந்து கவுன்ட்டர்கள் இன்று திறப்பு: இயக்குநர் ஆர்.மணி தகவல்

1 month ago 9

சென்னை: சென்னை அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் நோயாளிகள் சிரமப்படாமல் இருக்க கூடுதலாக மருந்து கவுன்ட்டர்கள் இன்று திறக்கப்படுகிறது என்று மருத்துவமனை இயக்குநர் ஆர்.மணி தெரிவித்தார்.

சென்னை அண்ணா சாலையில் உள்ள அரசு பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை மருந்தகத்தில் மருந்து வாங்குவதற்காக பெரிய வரிசை இருப்பதை அரசு விரும்புகிறதா? என்று ஒரு செய்தி சமூக வலைதளத்தில் நேற்று பரவியது. தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வந்திருந்த தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், அந்த செய்தியை பார்த்தவுடன் மருத்துவமனை இயக்குநர் ஆர்.மணியை தொலைபேசியில் அழைத்து இச்செய்தி குறித்து விசாரிக்க உத்தரவிட்டார்.

Read Entire Article