மும்பை: இஸ்ரேல் – ஈரான் போர் முடிவுக்கு வருவதாக டிரம்ப் அறிவித்ததால் பங்குச் சந்தையில் வர்த்தகம் விறுவிறுப்பாக நடைபெற்றது. தொடக்கத்தில் இருந்தே உயர்ந்து வந்த பங்குச் சந்தை குறியீட்டு எண்கள் 1.2% வரை அதிகரித்தன. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் 1121 புள்ளி, தேசியப் பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 346 புள்ளிகளானது. பிற்பகலில் குறையத் தொடங்கிய சென்செக்ஸ் இறுதியில் 158 புள்ளிகள் உயர்வுடன் 82,055 புள்ளிகளானது. வர்த்தக நேர இறுதியில் நிஃப்டி 72 புள்ளிகள் உயர்ந்து 25,044 புள்ளிகளில் நிறைவடைந்தது.
The post சென்செக்ஸ் 158 புள்ளிகள் உயர்வுடன் 82,055 புள்ளிகளில் நிறைவு!! appeared first on Dinakaran.