செந்துறை முதல் பொன்பரப்பி வரை சாலை அகலப்படுத்தும் பணி தீவிரம்

2 months ago 10

 

அரியலூர், நவ. 21: செந்துறை முதல் பொன்பரப்பி வரை சாலை அகலப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. பணிகளை கோட்டப்பொறியாளர் நேரில் ஆய்வு செய்தார்.
அரியலூர் (நெடுஞ்சாலை), கட்டுமானம் மற்றும் பராமரிப்பு, கோட்டத்தின் கட்டுபாட்டிலுள்ள செந்துறை உட்கோட்டத்தை சார்ந்த அரியலூர் முதல் ஜெயங்கொண்டம் (வழி) செந்துறை சாலையில் செந்துறை முதல் பொன்பரப்பி வரை முதலமைச்சரின் சாலை மேம்பாட்டு திட்டத்தின் மூலம் இருவழிச்சாலையை நான்குவழிச்சாலையாக அகலப்படுத்தும் பணிகளை கோட்டப்பொறியாளர் ஆய்வு செய்தார்.
பணிகளை தரமாகவும் விரைவாகவும் முடிக்க அறிவுரைகள் வழங்கினார். மேலும் ஆய்வின் போது உடன் செந்துறை நெடுஞ்சாலை துறை உதவிக்கோட்டப் பொறியாளர், உதவிப்பொறியாளர் உடன் இருந்தனர்.

 

The post செந்துறை முதல் பொன்பரப்பி வரை சாலை அகலப்படுத்தும் பணி தீவிரம் appeared first on Dinakaran.

Read Entire Article