செட்டிநாடு காளான் மசாலா

7 months ago 22

தேவையான பொருட்கள்:

காளான் – 200 கிராம்
நறுக்கிய வெங்காயம் – 1
சீரகம் 1/2 ஸ்பூன்
எண்ணெய் 50 மில்லி
கொத்தமல்லி

அரைப்பதற்கு:

தேங்காய் துருவல் – 3 ஸ்பூன்
காய்ந்த மிளகாய் 10 அல்லது 15
மல்லித்தூள் – 2 ஸ்பூன்
சோம்பு – 1 ஸ்பூன்
சீரகம் – 1 ஸ்பூன்
மிளகு – 1 ஸ்பூன்
கசகசா – 1 ஸ்பூன்
ஏலக்காய் – 2
அன்னாசிப்பூ – 2
பட்டை – 2
கிராம்பு – 2

வதக்கி அரைக்க:

சின்னவெங்காயம் – 1 கப்
தக்காளி – 3
இஞ்சி – 1 துண்டு
பூண்டு – 5 பற்கள்

செய்முறை:

முதலில் தேங்காய்த் துருவலை கடாயில் போட்டு பொன்னிறமாக வறுக்கவும். அதன்பின் 1/2 ஸ்பூன் எண்ணெய் விட்டு வறுக்க கொடுத்துள்ள பொருட்களை வறுத்து, ஆறிய பின்னர் தண்ணீர் சேர்த்து மசிய அரைக்கவும். – கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயம், தக்காளி, இஞ்சி, பூண்டு வதக்கி ஆற வைத்து அரைக்கவும்.பின்னர் கடாயில் எண்ணெய் விட்டு சீரகம், வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் அரைத்த வெங்காய விழுது சேர்த்து நன்கு வதக்கவும்.- இதன் மசாலா வாசனை போனதும் அரைத்த மசாலாவை சேர்க்கவும். இந்த நிலையில் தேவையான அளவு உப்பு சேர்க்கவும். மசாலா நன்கு கொதித்ததும் நறுக்கிய காளானை சேர்த்து 1/2 கப் தண்ணீர் சேர்த்து மூடி கொதிக்க விடவும்.நறுக்கிய காளான் நன்கு கொதித்து எண்ணெய் பிரிந்து வரும் போது கொத்தமல்லி தூவி இறக்கவும்.சுவையான செட்டிநாடு காளான் கிரேவி ரெடி. இது சப்பாத்தி மற்றும் சாதத்துக்கு சிறந்த சைடிஷாக இருக்கும்!

The post செட்டிநாடு காளான் மசாலா appeared first on Dinakaran.

Read Entire Article