செட்டிகுளம் முருகன் கோயிலில் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கினர்!

2 months ago 11

பாடாலூர்: கார்த்திகை முதல் தேதியை முன்னிட்டு சபரி மலைக்குச் செல்லும் ஐயப்ப பக்தர்கள் இன்று மாலை அணிந்து விரதம் தொடங்கினர். தமிழக ஐயப்ப பக்தர்கள், கார்த்திகை மாதத்தின் முதல் தேதியில் மாலை அணிந்து, ஒரு மண்டலம் எனப்படும் 48 நாட்களுக்கு விரதமிருந்து இருமுடி கட்டிக்கொண்டு சபரி மலைக்குச் சென்று ஐயப்பனை தரிசித்து வருவது வழக்கம். இதனையொட்டி பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா செட்டிகுளத்தில் வடபழனி என்றழைக்கப்படும் தண்டாயுதபாணி சுவாமி கோயில் மலை மீது அமைந்துள்ளது.

இந்த கோயிலில் ஏராளமான அய்யப்ப பக்தர்கள் இன்று துளசி மாலை அணிந்து விரதம் தொடங்கினர். குருக்கள் மற்றும் குருசாமிகள் பக்தர்களுக்கு மாலை அணிவித்தனர். இதையொட்டி தண்டாயுதபாணி கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர்.

 

The post செட்டிகுளம் முருகன் கோயிலில் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கினர்! appeared first on Dinakaran.

Read Entire Article