செங்கல்பட்டு - வல்லிபுரம் உரப்பூங்கா திட்டத்துக்கு ஒரு தரப்பினர் எதிர்ப்பு!

2 months ago 11

செங்​கல்​பட்டு மாவட்டம் திருக்​கழுக்​குன்றம் ஒன்றியம் வல்லிபுரம் ஊராட்​சி​யில், சென்னை ஐஐடி சார்​பில் சமூக பொறுப்பு​ணர்வு திட்​டத்​தின் கீழ் பல்வேறு பணிகள் மேற்​கொள்​ளப்​பட்டு வருகின்றன. இவற்றில் ஒன்றாக, திடக்​கழிவு மேலாண்மை திட்​டத்​தின் கீழ் மக்கும் மற்றும் மக்காத குப்பை என தரம் பிரித்து உரம் தயாரிக்​கும் வகையில் உரப்​பூங்கா அமைக்க திட்​ட​மிடப்​பட்​டது. இதற்கு, சென்னை ஐஐடி சார்​பில் ரூ.77 லட்சம் நிதி ஒதுக்​கப்​பட்​டது.

இதையடுத்து, சர்வே எண் 123-ல் உள்ள நிலத்​தில் ஒருபகு​தியாக 9.50 சென்ட் நிலம் தேர்வு செய்​யப்​பட்டு, திட்​டத்தை செயல்​படுத்​த​வும் நிலம் தேர்​வுக்​கும் ஊராட்சி மன்றத்​தில் தீர்​மானம் நிறைவேற்​றப்​பட்​டது. இதனால், விரை​வில் நவீன கட்டமைப்பு​களுடன் திடக்​கழிவு மேலாண்மை திட்​டத்​தில் உரப்​பூங்கா மற்றும் குப்பை தரம் பிரிக்​கும் யார்டு அமைக்​கப்​படும் என பொது​மக்கள் எதிர்​பார்த்​தனர்.

Read Entire Article