செங்கல்பட்டு மாவட்டத்திற்கு 28ம் தேதி உள்ளூர் விடுமுறை

5 hours ago 2

செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூரில் ஆதிபராசக்தி கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் நடைபெறும் ஆடிப்பூர விழா மிகவும் புகழ்பெற்றதாகும். இந்த விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ஆதிபராசக்தி சித்தர் பீடத்தை தரிசனம் செய்வது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான ஆடிப்பூர விழா வரும் 28ம் தேதி நடைபெறுகிறது.

இந்நிலையில், மேல்மருவத்தூர் ஆடிப்பூர விழாவையொட்டி செங்கல்பட்டு மாவட்டத்திற்கு வரும் 28ம் தேதி உள்ளூர் விமுறை அளிக்கப்பட்டுள்ளது. விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் அடுத்த மாதம் 9ம் தேதி வேலை நாளாக செயல்படும் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Read Entire Article