செங்கல்பட்டு: தமிழகம் முழுவதும் போதை பொருட்களை தடை செய்ய தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. அந்த வகையில், செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் போதை பொருட்களை விற்பனை செய்யும் நபர்களை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்து வருகின்றனர். இந்தநிலையில், செங்கல்பட்டு அடுத்த கொங்கனாஞ்சேரி – பாலூர் செல்லும் சாலையில் போதை பொருட்களை விற்பனை செய்து வருவதாக பாலூர் காவல் துறையினரக்கு ரகசிய தகவல் கிடைத்து. அதனை தொடர்ந்து, பாலூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் குமார் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அதிரடியாக ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்காவை விற்பனை செய்து வந்த இருவரை கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். கைதான நபர்கள் முதல்கட்ட விசாரணையில் முகமது யாசின் (30) மற்றும் சர்யுதீன் என்பவரின் மகன் ஷேக் அப்துல்லா (30) என தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து, இருவர் மீது வழக்கு பதிவு செய்து அவர்களிடம் இருந்து குட்கைவை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
The post செங்கல்பட்டு அருகே குட்கா விற்ற இருவர் கைது appeared first on Dinakaran.