சூளைமேடு, எம்எம்டிஏ காலனி, சேத்துப்பட்டு பகுதிகளில் குவியும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு அபாயம்

4 months ago 17

சூளைமேடு, அரும்பாக்கம் எம்எம்டிஏ காலனி, சேத்துப்பட்டில் பல்வேறு இடங்களில் சாலை ஓரமாக குப்பைகள் குவிந்துள்ளதால், சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. குப்பைகளை முறையாக அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னை மற்றும் புறநகரில் பல்வேறு இடங்களில் கடந்த 14, 15, 16-ம் தேதிகளில் தொடர் மழை பெய்தது. இந்த மழையால் பள்ளமான பகுதிகள், சாலைகளில் மழை நீர் தேங்கி வெள்ளக்காடானது. இதன்பிறகு, மழை படிப்படியாக குறையத் தொடங்கினாலும், மழை நீரில் அடித்து வரப்பட்ட குப்பைகள் பல இடங்களில் குவிந்திருந்தன. இதுபோல, முறிந்துவிழுந்த மரக்கிளைகள், வீடுகளில் வீணான பொருட்கள் ஆகியவை சாலை மற்றும் தெரு ஓரங்களில் உள்ள குப்பைத்தொட்டிகளில் நிரம்பி காணப்பட்டன.

Read Entire Article