சாயல்குடி. ஏப். 26: முதுகுளத்தூர் அருகே கீரனூரில் பலத்த காற்றுடன் பெய்த மழைக்கு வாழை மரங்கள் முறிந்து சேதமடைந்துள்ளது. சேதமடைந்த மரங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். முதுகுளத்தூர் அருகே கீரனூரில் ஒரு சில விவசாயிகள், நெல் விவசாயத்திற்கு அடுத்தபடியாக வாழை மரங்கள் நடவு செய்து விவசாயம் செய்து வருகின்றனர். முதுகுளத்தூர் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் கடந்த சில நாட்களாகவே அவ்வப்போது மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில் கீரனூரில் நேற்று பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதில் ஏராளமான வாழை மரங்கள் முறிந்து விழுந்து சேதமடைந்தது. இதனால் ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். எனவே வேளாண்மைத்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
The post சூறைக்காற்றுடன் கனமழை; வாழை மரங்கள் சாய்ந்து நாசம்: விவசாயிகள் கவலை appeared first on Dinakaran.