சூர்யகுமார் யாதவ் அரைசதம்... டெல்லிக்கு 181 ரன்கள் இலக்கு நிர்ணயித்த மும்பை இந்தியன்ஸ்

7 hours ago 4

மும்பை,

ஐ.பி.எல். தொடரில் மும்பையில் இன்று நடைபெற்று வரும் லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் ஆடி வருகின்றன. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற டெல்லி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. தொடர்ந்து மும்பையின் தொடக்க வீரர்களாக ரியான் ரிக்கெல்டன் மற்றும் ரோகித் சர்மா களம் இறங்கினர்.

இதில் ரோகித் சர்மா 5 ரன், ரியான் ரிக்கெல்டன் 25 ரன் எடுத்து அவுட் ஆகினர். தொடர்ந்து களம் புகுந்த வில் ஜேக்ஸ் 21 ரன், திலக் வர்மா 27 ரன், ஹர்திக் பாண்ட்யா 3 ரன் எடுத்து அவுட் ஆகினர். மறுபுறம் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய சூர்யகுமார் யாதவ் அரைசதம் அடித்து அசத்தினார்.

இறுதியில் மும்பை அணி 20 ஓவரில் 5 விக்கெட்டை இழந்து 180 ரன்கள் குவித்தது. மும்பை தரப்பில் அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 73 ரன் எடுத்தார். தொடர்ந்து 181 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி ஆட உள்ளது.

Read Entire Article