சுரங்க ஊழல் விவகாரம் ஜார்க்கண்ட், மே.வங்கம், பீகாரில் சிபிஐ சோதனை

2 months ago 13

புதுடெல்லி: ஜார்க்கண்டின் சாகிப்கஞ்சில் உள்ள நிம்பு பஹாரில் திருட்டு மற்றும் சட்டவிரோதமாக கற்களை வெட்டி எடுத்தது விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்துமாறு கடந்த ஆண்டு நவம்பர் 23ம் தேதி ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து வழக்கு பதிவு செய்த சிபிஐ அதிகாரிகள் இது குறித்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் ஜார்கண்ட் மற்றும் மேற்கு வங்கம், பீகார் ஆகிய 3 மாநிலங்களில் சிபிஐ அதிகாரிகள் நேற்று அதிரடியாக சோதனை நடத்தினார்கள்.

ஜார்கண்டின் சாகிப்கஞ்சில் மட்டும் 11 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ராஞ்சியில் 3 இடங்களிலும், பாட்னா மற்றும் கொல்கத்தாவில் தலா ஒரு இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். இந்த சோதனையின்போது ₹50லட்சம் ரொக்கம், ஒரு கிலோ தங்கம் மற்றும் ஒரு கிலோ வெள்ளி உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பல கோடி மதிப்பிலான சொத்து ஆவணங்களும் சிக்கியது.

 

The post சுரங்க ஊழல் விவகாரம் ஜார்க்கண்ட், மே.வங்கம், பீகாரில் சிபிஐ சோதனை appeared first on Dinakaran.

Read Entire Article