சுயகட்டுப்பாடு இல்லாவிட்டால் எதையும் சாதிக்க முடியாது: மாணவர்களுக்கு ஆளுநர் ரவி அறிவுரை

2 months ago 11

சென்னை: சுயகட்டுப்பாடு இல்லாவிட்டால் வாழ்க்கையில் எதையும் சாதிக்க முடியாது என்று மாணவர்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவுரை கூறினார்.

"ஆளுநரின் எண்ணித் துணிக" என்ற தலைப்பில், இளம் சாதனையாளர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி சென்னையில் உள்ள ஆளுநர் மாளிகையில் நேற்று நடைபெற்றது. இதில் கல்வி, விளையாட்டு உள்ளிட்ட துறைகளில் சாதனைபுரிந்த குழந்தைகளுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி விருது வழங்கி கவுரவித்தார். தொடர்ந்து, குழந்தைகள், பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுடன் அவர் கலந்துரையாடினார். அப்போது அவர் பேசியதாவது: சிறப்பு குழந்தைகள் குறித்து குறைந்த விழிப்புணர்வே உள்ளது. அவர்களின் தேவைகளை நிறைவேற்ற மத்திய, மாநில அரசுகள் உரிய முக்கியத்துவம் அளிப்பதில்லை.

Read Entire Article