சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு முளைப்பாரி எடுத்து வந்து கும்மியாட்டம் ஆடி வழிபாடு செய்த பெண்கள்

6 months ago 20
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோயிலில், நடைபெற்று வரும் கந்த சஷ்டி திருவிழாவின் ஐந்தாம் நாளான நேற்று, பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக கோயிலுக்கு வந்து கும்மியடித்து வழிபாடு நடத்தினர். கடந்த இரண்டாம் தேதி யாகசாலை பூஜைகளுடன் விழா தொடங்கிய நிலையில், விரதம் இருக்கும் பக்தர்கள் நாள்தோறும் அங்கப்பிரதட்சணம்,அடி பிரதட்சணம் செய்து வழிபடுவதுடன் கும்மியாட்டம் கோலாட்டம் ஆடி வழிபாடு நடத்தினர்.
Read Entire Article