சுதந்திர போராட்ட வீரர்களுக்கு ரூ.3.6 கோடியில் உருவ சிலைகள்: காணொலி காட்சி மூலம் முதல்வர் திறந்துவைத்தார்

3 hours ago 2

சென்னை: தென்காசி, திருப்பூர், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில்ரூ.3.6 கோடி செலவில் நிறுவப்பட்டுள்ள சுதந்திர போராட்ட வீரர்கள் வெண்ணி காலாடி, எத்தலப்பர் நாயக்கர், வீராங்கனை குயிலி ஆகியோரின் உருவச் சிலைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.

இதுதொடர்பாக தமிழக அரசுவெளியிட்ட செய்திக் குறிப்பு:2023-24-ம் ஆண்டுக்கான செய்திமக்கள் தொடர்புத்துறை மானியக்கோரிக்கையில், சுதந்திரப் போராட்ட வீரர் வெண்ணி காலாடியின் நினைவைப் போற்றும் வகையில் உருவச்சிலை அமைக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது. அந்த அறிவிப்பின்படி தென்காசி மாவட்டம், நெல்கட்டும் செவல் கிராமம், பச்சேரியில் ரூ.50 லட்சம் செலவில் உருவச்சிலை நிறுவப்பட்டுள்ளது.

Read Entire Article