சுசீந்திரம் அருகே பெயின்டரை தாக்கி பணம் பறித்த 3 பேர் கைது

2 weeks ago 3

நாகர்கோவில், ஏப்.27: குமரி மாவட்டம் சுசீந்திரம் அடுத்த புதுக்கிராமம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ்குமார் (38). பெயின்டர். சம்பவத்தன்று இவர், தனது 10 வயது மகனுடன், தேரூர் மகாராஜபுரம் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 5 பேர் கும்பல், ரமேஷ்குமாரை வழி மறித்து தடுத்து நிறுத்தி கையால் சரமாரியாக தாக்கியது. மேலும் ரமேஷ் குமார் வைத்திருந்த ரூ.6 ஆயிரம் பணத்தையும் பறித்து விட்டு தப்பினர். படுகாயம் அடைந்த ரமேஷ்குமார், ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து சுசீந்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி, தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டதாக தேரூர் மகாராஜபுரத்தை சேர்ந்த சுஜித், நவீன், பிரின்ஸ் (22), கவுதம் (20), நிஷாந்த் (21) ஆகிய 5 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். இதில் சுஜித், நவீன் தவிர மற்ற 3 பேரும் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இவர்கள் அனைவரும் பெயின்டர்கள் ஆவர். தொழில் போட்டி காரணமாக இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

The post சுசீந்திரம் அருகே பெயின்டரை தாக்கி பணம் பறித்த 3 பேர் கைது appeared first on Dinakaran.

Read Entire Article