ஸ்ரீபெரும்புதூர்: சுங்குவார்சத்திரம் அருகே பைக் மீது லாரி மோதியதில் முதியவர் தலை நசுங்கி பரிதாபமாக பலியானார். மற்றொருவருக்கு இடது கையில் முறிவு ஏற்பட்டது. ஸ்ரீபெரும்புதூர் அருகே சுங்குவார்சத்திரம் அடுத்த பாப்பாங்குழி கிராமம் பெருமாள் கோயில் தெருவை சேர்ந்தவர் சந்திரன் (72). அதே பகுதியை சேர்ந்தவர் மாசிலாமணி (45).
இவர்கள், நேற்று காலை பைக்கில் சுங்குவார்சத்திரம் பஜாரில் இருந்து சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை வழியாக சந்தவேலூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது, சந்தவேலூர் அருகே சென்றபோது, கனரக லாரி பைக் மீது மோதியது. இதில், அமர்ந்திருந்த சந்திரன் கீழே விழுந்தபோது, தலை மீது லாரியின் சக்கரம் ஏறி இறங்கியதில் அவர் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே துடிதுடி பரிதாபமாக பலியானார்.
மேலும், மாசிலாமணிக்கு இடது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. தகவலறிந்ததும், சம்பவ இடத்திற்கு சென்ற சுங்குவார்சத்திரம் போலீசார், கையில் முறிவு ஏற்பட்ட மாசிலாமணியை மீட்டு சிகிச்சைக்காகவும், தலை நசுங்கி பலியான சந்திரனை மீட்டு பிரேத பரிசோதனைக்காகவும் ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post சுங்குவார்சத்திரம் அருகே சோகம் பைக் மீது லாரி மோதியதில் தலை நசுங்கி முதியவர் பலி: மற்றொருவருக்கு இடது கை முறிந்தது appeared first on Dinakaran.