சீர்காழியில் நாளை மின் குறைதீர் கூட்டம்

2 months ago 10

 

சீர்காழி, பிப்.18: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி மின்சார வாரிய செயற்பொறியாளர் வள்ளி மணாளன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சீர்காழி மின்சார வாரிய கோட்டத்தில் நாளை (19ம் தேதி) காலை 10:30 மணி அளவில் செயற்பொறியாளர் இயக்குதலும் பராமரித்தாலும் சீர்காழி கோட்ட அலுவலகத்தில் நாகை மின் பகிர்மான வட்ட பொறியாளர் ரவி தலைமையில் மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது.

இக்கூட்டத்தில் சீர்காழி கோட்டத்திற்கு உட்பட்ட சீர்காழி, கொள்ளிடம், மாதானம், அரசூர், பூம்புகார், காளி மணல்மேடு, வைத்தீஸ்வரன் கோயில், ஆக்கூர், திருக்கடையூர், கிடாரங் கொண்டான் திருவெண்காடு ஆகிய பிரிவு அலுவலகத்தைச் சார்ந்த பகுதியில் உள்ள மின் உபயோகிப்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு மின்சார வாரியம் தொடர்பான தங்களது குறைகளை தெரிவித்து பயன்பெறலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறியுள்ளார்

 

The post சீர்காழியில் நாளை மின் குறைதீர் கூட்டம் appeared first on Dinakaran.

Read Entire Article