சீன நிறுவனத்தின் ரூ.85,000 கோடி முதலீட்டை தமிழகம் இழந்துள்ளது: பாமக தலைவர் அன்புமணி விமர்சனம்

1 month ago 13

சென்னை: சீன கார் நிறுவனத்தின் ரூ.85 ஆயிரம் கோடி முதலீட்டை இழந்திருப்பது தமிழகத்தின் திறன் குறைந்து வருவதை காட்டுவதாக பாமக தலைவர் அன்புமணி விமர்சித்துள்ளார்.

இதுதொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கை: சீனாவைச் சேர்ந்த மின்சார கார் நிறுவனமான பி.ஒய்.டி ரூ.85 ஆயிரம் கோடி முதலீட்டில் இந்தியாவில் அதன் முதலாவது கார் உற்பத்தி ஆலையை ஹைதராபாத்தில் அமைக்க முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தமிழகத்துக்கு இந்த கார் ஆலையை கொண்டு வருவதற்கான வாய்ப்புகளை தமிழக அரசு கோட்டை விட்டிருக்கிறது.

Read Entire Article