சிவகிரி,ஜன.14: சிவகிரி காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு தென்காசி மாவட்ட எஸ்பி அரவிந்த் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது சிவகிரி, வாசுதேவநல்லூர் பகுதியில் பொங்கல் பண்டிகை காலத்தில் தீவிர கண்காணிப்பு பணி மேற்கொள்ள ேபாலீசாருக்கு அறிவுரை வழங்கினார். இதை தொடர்ந்து சிவகிரி சோதனை சாவடியில் மாவட்ட எஸ்பி அரவிந்த் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது, புளியங்குடி டிஎஸ்பி வெங்கடேசன், இன்ஸ்பெக்டர் கண்மணி, சப்-இன்ஸ்பெக்டர் வரதராஜன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கண்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.
The post சிவகிரி போலீஸ் நிலையத்தில் எஸ்பி திடீர் ஆய்வு appeared first on Dinakaran.