சிவகாசி, ஜூன் 13: சிவகாசி மாநகராட்சியில் மூன்றாவது நாளாக ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடைபெற்றது. சிவகாசி மாநகராட்சி பகுதிகளில் ஆணையாளர் சரவணன் உத்தரவின் பேரில் ஆக்கிரமிப்பு கட்டிடங்களை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றி வருகின்றனர். இந்த ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணிகள் கடந்த 3 நாட்களாக நடைபெற்று வருகின்றது.
இதில் நகரில் சுமார் 80க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் அகற்றினர். ஆக்கிரமிப்பு அகற்றம் பணிகள் தொடர்ந்து நடைபெறும் என்றும், விதிகளை மீறி ஆக்கிரமிப்பில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆணையாளர் சரவணன் எச்சரித்துள்ளார்.
The post சிவகாசியில் ஆக்கிரமிப்பு அகற்றம் appeared first on Dinakaran.