சிவகங்கையில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்

6 months ago 19

 

சிவகங்கை, டிச. 12: சிவகங்கையில் டிச.18அன்று உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டம் நடைபெற உள்ளதையடுத்து இன்று (டிச.12) முதல் பொதுமக்கள் மனுக்கள் அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவித்துள்ளதாவது:மக்களின் குறைகளை கேட்டு உடனுக்குடன் தீர்வு காண உங்களை தேடி உங்கள் ஊரில் என்ற புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் கலெக்டர் உள்ளிட்ட மாவட்ட அனைத்து உயர் அலுவலர்களும் ஒவ்வொரு மாதமும் ஒரு நாள் வட்ட அளவில் தங்கி கள ஆய்வில் ஈடுபட்டு, அரசு அலுவலகங்களை ஆய்வு செய்து மக்களின் குறைகளை கேட்டறிந்து அரசின் திட்டங்கள் மக்களை சென்றடைவதை உறுதி செய்வர். இதனடிப்படையில் டிச.18 அன்று ஒரு நாள் முழுவதும் கலெக்டர் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் சிவகங்கை வட்டத்தில் இருப்பார்கள். எனவே, இன்று முதல் டிச.16 வரை பொதுமக்கள் தங்களின் குறைகள் தொடர்பான மனுக்களை சிவகங்கை வட்டத்திற்குட்பட்ட பேரூராட்சி அலுவலகம், விஏஓ அலுவலகம் மற்றும் ஊராட்சி அலுவலகங்களில் அளிக்கலாம்.

The post சிவகங்கையில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம் appeared first on Dinakaran.

Read Entire Article