சிலை பதுக்கிய வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும்: புதிய தமிழகம் கட்சி வலியுறுத்தல்

2 hours ago 2

திருநெல்வேலி / தூத்துக்குடி: ஒட்டப்பிடாரத்தில் அம்மன் சிலையை பதுக்கியது தொடர்பாக திமுக பிரமுகர் உட்பட 4 பேர் கைதாகியுள்ள நிலையில், உண்மைக் குற்றவாளிகளைக் கைது செய்ய இந்த வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என்று வலியுறுத்தி, புதிய தமிழகம் கட்சியினர் நெல்லை டிஐஜியிடம் மனு அளித்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரத்தில் உள்ள பழைய இரும்க்பு கடையில் அம்மன் சிலை பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக வந்த தகவலையடுத்து, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஆய்வாளர் வனிதாராணி தலைமையிலான போலீஸார் கடந்த வாரம் அப்பகுதியில் பழைய இரும்புக் கடைகளை கண்காணித்தனர்.

Read Entire Article