சிறைகள் தண்டனைக்​குரிய இடமல்ல; சீர்​திருத்தம் செய்​யும் இடங்​களாகும்: உதயநிதி கருத்து

2 months ago 12

சென்னை: ‘‘சிறைகள் தண்டனைக்குரிய இடமாக அரசு பார்ப்பதில்லை. அது ஒரு சீர்த்திருத்தத்துக்கான இடமாக பார்க்கிறது’’ என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறையின் தமிழ்நாடு சிறை மீண்டோர் நலச்சங்கத்தின் சார்பில், கடந்த ஆண்டுகளில் விடுதலை செய்யப்பட்டு, சமூக வாழ்க்கைக்குத் திரும்பிய 750 முன்னாள் சிறைவாசிகள் சுயதொழில் தொடங்கி வாழ்வாதாரத்தை வளப்படுத்தும் வகையில் ரூ.3 கோடியே 75 லட்சம் நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதன் அடையாளமாக 10 முன்னாள் சிறைவாசிகளுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் காசோலைகளை வழங்கினார்.

Read Entire Article