சென்னை: சிறைத்துறை முதல்நிலை காவலர்கள் பணியிட மாற்ற உத்தரவை தமிழக அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகம் முழுவதும் பல்வேறு சிறைகளில் பணிபுரிந்து வந்த 150 முதல்நிலை சிறைத்துறை காவலர்களை எவ்வித முன்னறிவிப்பும் இன்றி திமுக அரசு பணியிட மாற்றம் செய்ய உத்தரவிட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட உள்ளதால், சிறைத்துறை காவலர்கள் பணிபுரியும் பகுதிக்கு அருகே தங்களது பிள்ளைகளை சேர்த்து கட்டணம் செலுத்திவிட்ட நிலையில், திடீரென காவலர்களை இடமாற்றம் செய்திருப்பது கண்டனத்துக்குரியது.