சிறுமியை பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை: திண்டுக்கல் போக்சோ கோர்ட் தீர்ப்பு

2 months ago 11

 

திண்டுக்கல், டிச. 13:சாணார்பட்டி அருகே உள்ள வேம்பார்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் முருகன் (எ) குருசிலி (51). கூலித்தொழிலாளி. இவர், கடந்த 2023ம் ஆண்டு 16 வயது சிறுமி ஒருவரை, ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.இது குறித்து சிறுமியின் உறவினர்கள் அளித்த புகாரின்பேரில், சாணார்பட்டி போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிந்து, முருகனை கைது செய்தனர்.

இந்த வழக்கு திண்டுக்கல் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.அரசு தரப்பில் வழக்கறிஞர் மைதிலி ஆஜரானார். வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில், நீதிபதி வேல்முருகன் நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கினார். அதில், சிறுமியை பலாத்காரம் செய்த முருகனுக்கு ஆயுள் தண்டனை, ரூ.1 லட்சத்து 11 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.

The post சிறுமியை பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை: திண்டுக்கல் போக்சோ கோர்ட் தீர்ப்பு appeared first on Dinakaran.

Read Entire Article