ஈரோடு, பிப். 11: ஈரோடு மாவட்டம் பவானி உமாரெட்டியூரை சேர்ந்தவர் மாதவன் (40). கூலி தொழிலாளி. இவர், பவானி பகுதியில் சாலையில் விளையாடி கொண்டிருந்த 6 வயது சிறுமியிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இதைப்பார்த்த சிறுமியின் பெற்றோர், மாதவனை பிடித்து பவானி அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணையில் சிறுமியிடம் மாதவன் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டதை உறுதி செய்து, மாதவன் மீது போக்சோ வழக்கு பதிவு செய்து நேற்று முன்தினம் கைது செய்து, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைத்தனர்.
The post சிறுமிக்கு பாலியல் தொல்லை; தொழிலாளி போக்சோவில் கைது appeared first on Dinakaran.