
மாஸ்கோ,
ரஷிய தலைநகர் மாஸ்கோவின் கொலமா மாவட்டத்தில் இன்று சிறிய ரக விமானம் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தது. அந்த விமானத்தில் 4 பேர் பயணித்தனர்.
நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது விமானத்தில் எஞ்சின் கோளாறு ஏற்பட்டது. இதனால், விமானியின் கட்டுப்பாட்டை இழந்த விமானம் தரையில் விழுந்து விபத்துக்குள்ளானது.இதில், விமானத்தில் தீ பற்றி எரிந்தது. இந்த சம்பவத்தில் விமானத்தில் பயணித்த 4 பேரும் உடல் கருகி உயிரிழந்தனர்.
தகவலறிந்து விரைந்து வந்த மீட்புக்குழுவினர் , உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.