நாகர்கோவில், மே 29: தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு: தெற்கு ரயில்வே பயணிகளின் தேவையை கருத்தில் கொண்டு பல்வேறு சிறப்பு ரயில்களின் சேவையை நீட்டிப்பு செய்துள்ளது. ரயில் எண் 06012 நாகர்கோவில் ஜங்ஷன்-தாம்பரம் சிறப்பு ரயில் ஞாயிற்றுகிழமைகளில் இயக்கப்படுவது ஜூன் 8ம் தேதி முதல் ஜூன் 29ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது. ரயில் எண் 06011 தாம்பரம்-நாகர்கோவில் ஜங்ஷன் சிறப்பு ரயில் திங்கள்கிழமைகளில் இயக்கப்படுவது 9.6.2025 முதல் 30.6.2025 வரை இயக்கப்படுகிறது. இவ்வாறு செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post சிறப்பு ரயில் ஜூன் 29 வரை நீட்டிப்பு appeared first on Dinakaran.