சிம்புவின் 'எஸ்.டி.ஆர் 49' படம் கைவிடப்பட்டதா?

7 hours ago 2

சென்னை,

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சிம்பு. இவரது நடிப்பில் கடந்த 5-ம் தேதி 'தக் லைப்' படம் வெளியானது. மணி ரத்னம் இயக்கிய இப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்று வருகிறது. அதனை தொடர்ந்து நடிகர் சிம்பு 'பார்க்கிங்' திரைப்பட இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் 'எஸ்டிஆர் - 49' படத்திலும், தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் 'எஸ்டிஆர் - 50' திரைப்படத்திலும், அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் 'எஸ்டிஆர் - 51' படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

'எஸ்டிஆர் 49' படத்தில் சிம்பு கல்லூரி மாணவனாக நடிப்பார் என்று கூறப்படுகிறது. அதனையெட்o சிம்புவின் பிறந்த நாளில் இப்படத்திற்கான அறிவிப்பினை வெளியிட்டனர். ராம்குமார் பாலகிருஷ்ணன் - சிம்பு கூட்டணியில் உருவாக இருந்த 'எஸ்டிஆர் 49' படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்க இருந்தார்.

இந்த நிலையில், 'எஸ்டிஆர் 49' திரைப்படம் கைவிடப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அதாவது, படத்தின் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் அமலாக்கத்துறை விசாரணை வளையத்திற்குள் இருப்பதால் படத்தின் தயாரிப்பு பணிகளை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதேசமயம், நடிகர் சிம்புவுக்கும் சந்தானத்திற்கும் இடையே சிறிய பூசல் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால், இப்படத்திலிருந்து விலகி சிம்பு இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Read Entire Article