சித்திரை திருவிழாவுக்கான முழு ஏற்பாடுகளையும் மதுரை மாநகராட்சி செய்யும்: அமைச்சர் கே.என்.நேரு உறுதி

1 month ago 10

சென்னை:“மதுரையில் சித்திரைத் திருவிழாவை சிறப்பாக நடத்துவதற்கான முழு ஏற்பாடுகளையும் மதுரை மாநகராட்சி செய்யும்” என்று சட்டப்பேரவையில் அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தில் பேசிய எதிர்க்கட்சித் துணைத்தலைவர் ஆர். பி.உதயகுமார், “மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சார்பில் மதுரை மாநகராட்சி நிர்வாகத்துக்கு ரூ.1 கோடிக்கு மேல் நிலுவை வைத்திருப்பதாகவும், அந்த கட்டணத்தை செலுத்தினால் மட்டுமே சித்திரைத் திருவிழாவுக்கான ஏற்பாடுகளை செய்ய முடியும் என்று மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார். இத்தகவல் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருக்கு தெரியுமா?” என்று கேள்வி எழுப்பினார்.

Read Entire Article