சித்திரை ஆட்டத்திருநாள் திருவிழா சபரிமலை கோயில் நடை நாளை திறப்பு

3 months ago 13

திருவனந்தபுரம்: திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கடைசி மன்னரான சித்திரைத் திருநாள் பாலராம வர்மாவின் பிறந்த நாளை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோயிலில் வருடம்தோறும் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்படுவது வழக்கம். இந்த மன்னர்தான் சபரிமலையில் மண்டல பூஜையை முன்னிட்டு ஐயப்ப விக்கிரகத்தில் அணிவிக்கப்படும் தங்க அங்கியை காணிக்கையாக வழங்கினார்.

இந்த வருட சித்திரை ஆட்டத்திருநாள் வரும் 31ம் தேதி ஆகும். இதை முன்னிட்டு 30ம் தேதி மாலை 5 மணிக்கு சபரிமலை கோயில் திறக்கப்படும். 31ம் தேதி இரவு 10 மணிக்கு கோயில் நடை சாத்தப்படும். மீண்டும் மண்டல கால பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை நவம்பர் 15ம் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படும்.

The post சித்திரை ஆட்டத்திருநாள் திருவிழா சபரிமலை கோயில் நடை நாளை திறப்பு appeared first on Dinakaran.

Read Entire Article