சிங்கம்புணரி: சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே கல் குவாரியில் கல் சரிந்ததில் 5 பேர் உயிரிழந்தனர்.
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே மல்லாக்கோட்டையில் தனியார் கல் குவாரி இயங்கி வருகிறது. இன்று காலை குவாரி பள்ளத்தில் கல் சரிந்ததில் 7 பேர் சிக்கி கொண்டனர்.