சாவர்க்கர் குறித்து ராகுல் பேசிய விவகாரம்: அலகாபாத் ஐகோர்ட் உத்தரவுக்கு இடைக்கால தடை

6 hours ago 2


புதுடெல்லி: சாவர்க்கர் குறித்து பேசியதற்கு எதிராக குற்றவியல் நடுவர் நீதிமன்றம் வழங்கிய சம்மனை ரத்து செய்ய மறுத்த அலகாபாத் உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல்காந்தி தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனுவானது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் திபங்கர் தத்தா மற்றும் மன்மோகன் ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘ராகுல் காந்தியின் பாட்டி இந்திரா காந்தி, சாவர்க்கருக்கு கடிதம் எழுதி இருக்கிறார்.

அது அவருக்கு தெரியுமா அல்லது தெரியாதா?. குறிப்பாக ராகுல் காந்தி இனிமேல் ஒரு வார்த்தை கூட சுதந்திர போராட்ட வீரர்கள் பற்றி பேசக்கூடாது. அப்படி பேசினால் அவருக்கு எதிராக தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்ய நேரிடும். நமக்கு சுதந்திரம் வாங்கி கொடுத்தவர்களை இப்படித்தான் பேசி நாம் நடத்துவதா?’ என்று கேள்வியெழுப்பிய நீதிபதிகள், ‘இந்த விவகாரத்தில் எதிர்மனுதாரர்கள் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பிக்கப்படுகிறது. அதே நேரத்தில் அலகாபாத் உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவிற்கு இடைக்கால தடை விதிக்கப்படுகிறது’ என்று உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தனர்.

 

The post சாவர்க்கர் குறித்து ராகுல் பேசிய விவகாரம்: அலகாபாத் ஐகோர்ட் உத்தரவுக்கு இடைக்கால தடை appeared first on Dinakaran.

Read Entire Article