சாலையில் திரியும் மாடுகளால் அபாயம்

2 months ago 11

 

ஓசூர், நவ.8: ஓசூர் மாநகரில், போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக ஏராளமான எருமை, மாடுகள், நாய்கள் உள்ளிட்டவை பிரதான சாலைகளில் சுற்றித் திரிகின்றன. இதனால் சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் பலர் அச்சத்துடன் செல்கின்றனர். மேலும், சில மாடுகள் வாகன ஓட்டிகளை திடீரென தாக்க வருவதால் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.

மேலும் சாலையின் நடுவே படுத்து கிடக்கின்றன. துரத்தினாலும் செல்லாமல் அங்கேயே கிடக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் சாலையில் செல்ல முடியாமல் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே, சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை மாநகராட்சி நிர்வாகம் பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.

The post சாலையில் திரியும் மாடுகளால் அபாயம் appeared first on Dinakaran.

Read Entire Article