சாலை விபத்தில் தனியார் விடுதி மேலாளர் பலி

2 weeks ago 4

 

தாராபுரம், ஜன.14: தாராபுரம் அருகே உள்ள கொண்டரசம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் வீரப்பன் (48). இவர், தாராபுரம், அமராவதி சிலை ரவுண்டானா அருகில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் மேலாளராக பணியாற்றி வந்தார்.
சம்பவத்தன்று வழக்கம் போல் இரவு வேலை முடிந்து பைக்கில் வீட்டிற்கு சென்றார். பின்னர் வீட்டின் அருகே உள்ள தாராபுரம்- உடுமலை நெடுஞ்சாலை அருகில் உள்ள கடைக்கு நடந்து சென்ற போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத பைக் மோதியதில், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து தாராபுரம் போலீசார்வழக்குப்பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் பைக்கில் தப்பிய நபர் யார்? என்பது குறித்து அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி.கேமரா மூலம் ஆய்வு செய்து விசாரிக்கின்றனர்.

The post சாலை விபத்தில் தனியார் விடுதி மேலாளர் பலி appeared first on Dinakaran.

Read Entire Article