சென்னை, ஜூன் 28: சென்னை போக்குவரத்து காவல்துறை வெளியிட்ட அறிக்கை: தெற்கு ரயில்வே துறை சார்பாக ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை பாலத்தில் சாலை சீரமைக்கும் பணி நடைபெற உள்ளதால் சுரங்கப்பாதையில் செல்லும் வாகன போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படுகிறது. எனவே நாளை (29ம் தேதி) முதல் ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை ஒருவழிப்பாதையாக மாற்றப்படுகிறது. அதன்படி,
* காமராஜர் சாலையில் இருந்து இராஜாஜி சாலை வழியாக பாரிமுனை நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும் போர் நினைவு சின்னம் – தலைமைச்செயலகம் வழியாக அதே சாலையில் செல்லலாம். இவ்வாகன போக்குவரத்தில் எவ்வித மாற்றமில்லை.
* ராயபுரம் பாலம், ராஜாஜி சாலையில் இருந்து, காமராஜர் சாலை செல்லும் அனைத்து வாகனங்களும், ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை வழியாக செல்ல தடை செய்யப்படுகிறது. மாற்று பாதையாக ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை அணுகு சாலை – வடக்கு பக்க கோட்டை சாலை – ராஜா அண்ணாமலை மன்றம் – முத்துசாமி சாலை – டாக்டர் முத்துசாமி பாலம் – வாலாஜா சிக்னல் – கொடிமர சாலை போர் நினைவு சின்னம் வழியாக சென்று காமராஜர் சாலையை அடையலாம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
The post சாலை சீரமைப்பு பணிக்காக நாளை முதல் ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை ஒருவழிப்பாதையாக மாற்றம்: காவல்துறை தகவல் appeared first on Dinakaran.