சாரண, சாரணியர் இயக்கத்தின் 75ம் ஆண்டு விழா - இலச்சினை வெளியிட்ட துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

4 months ago 15

சென்னை: சாரண, சாரணியர் இயக்கத்தின் 75-வது நிறுவன நாளின் கொடி, சிறப்பு பெருந்திரளணியின் முதல் அறிவிப்பு இதழ் மற்றும் இலச்சினையை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று வெளியிட்டார்.

இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தஞ்சாவூர் மாவட்டத்தில் சாரண, சாரணியர் இயக்கத்தின் 75வது நிறுவன நாள் கொடி, சிறப்புப் பெருந்திரளணியின் முதல் அறிவிப்பு இதழ் (Bulletin), இலச்சினை (Logo) ஆகியவற்றை வெளியிடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன், பாரத சாரண, சாரணியர் இயக்கத்தின் மாநிலத் தலைவர் மற்றும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா ஆகியோர் முதல் அறிவிப்பு இதழ்களை வழங்கினார்.

Read Entire Article