சாத்தூர் ரயில்நிலையத்தில் லிப்ட் பயன்பாட்டிற்கு வருமா? பயணிகள் எதிர்பார்ப்பு

3 hours ago 1

 

சாத்தூர், பிப்.24: சாத்தூர் ரயில் நிலையத்தில், பயணிகளின் வசதிக்காக அமைக்கப்பட்ட லிப்ட் பயன்பாட்டிற்கு வராமல் உள்ளது. இதனை உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். சாத்தூர் ரயில் நிலையத்தில் மூன்று நடைமேடைகள் பயன்பாட்டில் இருந்து வருகின்றன. முதல் நடைமேடையில் இருந்து இரண்டாவது மற்றும் மூன்றாவது நடைமேடைக்கு செல்வதற்கு மேம்பாலம் உள்ளது.

இதனை 2வது, 3வது நடைமேடைக்கும் வரும் ரயில்களில் பயணம் செய்வதற்கு செல்லும் பயணிகள், பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் வயதான முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் ரயில் நிலையத்தை விட்டு வெளியே செல்வதற்கு நடை மேடையை பயன்படுத்த பெரிதும் சிரமப்படுவதை அடுத்து, லிப்ட் வசதி அமைக்கப்பட்டது. ஆனால் லிப்ட் பயன்பாட்டிற்கு வராமல் உள்ளது. இதனை உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post சாத்தூர் ரயில்நிலையத்தில் லிப்ட் பயன்பாட்டிற்கு வருமா? பயணிகள் எதிர்பார்ப்பு appeared first on Dinakaran.

Read Entire Article