சாத்தான்குளம் குளக்கரையில் மரக்கன்று நடும் விழா

7 months ago 23

சாத்தான்குளம், நவ. 22: சாத்தான்குளம் அல்லியார் குளம் கரையில் பேரூராட்சி தலைவர் ரெஜினி ஸ்டெல்லா பாய் மரக்கன்றுகள் நட்டினார். சாத்தான்குளம் பேரூராட்சி மன்றம் சார்பில் 15 வார்டுகளுக்கு உட்பட்ட அல்லியார் குளக்கரையில் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது. மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் ஜோசப் தலைமை வகித்தார். துணை தலைவர் மாரியம்மாள், பேரூராட்சி செயல் அலுவலர் உஷா முன்னிலை வகித்தார். கவுன்சிலர் லிங்கப்பாண்டி வரவேற்றார். பேரூராட்சி தலைவர் ரெஜினி ஸ்டெல்லா பாய் கலந்து கொண்டு மரக்கன்றுகள் நடும் பணியை தொடங்கி வைத்தார். இதில் கவுன்சிலர்கள் சுந்தர், ஜான்சி ராணி, ஸ்டான்லி, லிசா, மகாராஜன், தேவநேசம், கற்பகவல்லி, பேரூராட்சி பணியாளர் பன்னீர்செல்வம், நகர திமுக துணை செயலாளர் மணிகண்டன், இளைஞரணி செந்தில்முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post சாத்தான்குளம் குளக்கரையில் மரக்கன்று நடும் விழா appeared first on Dinakaran.

Read Entire Article