கோவை: மத்திய அரசின் சாதிவாரி கணக்கெடுப்பு அறிவிப்புக்கு வரவேற்பு தெரிவித்துள்ள பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர் உரிமைக்கான கூட்டமைப்பு, கணக்கெடுப்பு தரவுகள் அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளது.
பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர் உரிமைக்கான கூட்டமைப்பின் தலைவர் ரத்தினசபாபதி கோவையில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: எங்கள் கூட்டமைப்பும், ஓபிசி ரைட்ஸ் இயக்கமும் கடந்த 2020-ம் ஆண்டு முதல் தற்போது வரை சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக் கோரி தொடர்ச்சியாக போராடி வருகிறோம்.