சென்னை: சவுக்கு சங்கர் வீட்டின் மீது கழிவு நீரை கொட்டி தாக்குதல் நடத்தப் பட்டதற்கு அரசியல் கட்சி தலை வர்கள் கண்டனம் தெரிவித் துள்ளனர்.
பிரபலயூடியூபர் சவுக்கு சங்கர், 'கழிவுநீர் அகற்று சேவை வாகனங் கள் ஒப்பந்தம்' தொடர்பாக விமர் சனம் செய்திருந்தார். இதை யடுத்து, சவுக்கு சங்கர் தங்களை இழிவுபடுத்தி விட்டதாகக் கூறி தூய்மைப் பணியாளர்கள் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள அவருடைய வீட்டின்முன்பு நேற்று காலை திரண்டனர். திடீரெனஅவர் கள், வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே நுழைந்து பொருட்களை சேதப்படுத்தினர். வீட்டுக்குள் கழிவுநீரையும் ஊற்றி னர். மேலும், சவுக்கு சங்கரின்தாயா ருக்கு கொலை மிரட்டலும் விடுத் தனர். இந்த சம்பவத்தைக் கண்டித்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வெளியிட்ட அறிக்கைகள் வருமாறு: