கேப்டவுன்: தென்னாப்பிரிக்காவின் நட்சத்திர விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ஹென்றிக் க்ளாஸன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். க்ளாஸன் 2024 ஜனவரியில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார், ஆனால் நாட்டிற்காக டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து விளையாடினார்.
ஓய்வு குறித்து க்ளாஸன் தனது இன்ஸ்டாகிராமில் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது; “இது எனக்கு மிகவும் சோகமான நாள். நான் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளேன். எனக்கும் என் குடும்பத்திற்கும் எது சிறந்தது என்பதை முடிவு செய்ய எனக்கு நீண்ட நேரம் பிடித்தது. இது மிகவும் கடினமான முடிவு, ஆனால் நான் அதில் முழுமையாக மகிழ்ச்சியடைகிறேன். என் நாட்டை பிரதிநிதித்துவப்படுத்துவது எனக்கு கிடைத்த ஒரு மரியாதை.
என் நாட்டிற்காக விளையாடுவது நான் சிறு வயதிலிருந்தே என் கனவாக இருந்து வருகிறது. அதற்காக நான் கடினமாக உழைத்தேன். இந்த நேரத்தில், நான் பல நல்ல நண்பர்களையும் உறவுகளையும் உருவாக்கியுள்ளேன், அவர்களை என் வாழ்நாள் முழுவதும் என்னுடன் வைத்திருப்பேன். கிரிக்கெட் பல சிறந்த மனிதர்களைச் சந்திக்க எனக்கு வாய்ப்பளித்துள்ளது, இது என் வாழ்க்கையை மாற்றியுள்ளது. அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
ஹென்றிக் க்ளாஸன் 2018 ஆம் ஆண்டு இந்தியாவுக்கு எதிராக ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் அறிமுகமானார். 2019 ஆம் ஆண்டு இந்தியாவுக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார். க்ளாஸன்தென்னாப்பிரிக்காவுக்காக 4 டெஸ்ட், 60 ஒருநாள் மற்றும் 58 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். ஒருநாள் கிரிக்கெட்டில், கிளாசன் 2141 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 4 சதங்கள் மற்றும் 11 அரைசதங்கள் அடங்கும். 141.84 ஸ்ட்ரைக் ரேட்டில் 2000 ரன்கள் எடுத்துள்ளார். டி20 போட்டிகளில் 5 அரைசதங்களை அடித்துள்ளார்.
The post சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார் தென்னாப்பிரிக்க வீரர் ஹென்றிக் க்ளாஸன் appeared first on Dinakaran.