சர்வதேச கிரிக்கெட்டில் ராகுல் டிராவிட்டின் வாழ்நாள் சாதனையை தகர்த்த ரோகித் சர்மா

3 months ago 16

கட்டாக்,

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.

இதனையடுத்து இந்தியா - இங்கிலாந்து இடையிலான 2-வது ஒருநாள் போட்டி கட்டாக் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 49.5 ஓவர்களில் 304 ரன்கள் அடித்து ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக ஜோ ரூட் 69 ரன்கள் அடிக்க, இந்தியா தரப்பில் ஜடேஜா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதனையடுத்து 305 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி 44.3 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 308 ரன்கள் குவித்து 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ரோகித் சர்மா 7 சிக்சர்கள் உள்பட 119 ரன்கள் குவித்தார். அவரே ஆட்டநாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார்.

சர்வதேச கிரிக்கெட்டில் ரோகித் சர்மா அடித்த 49-வது சதம் (டெஸ்ட்,ஒருநாள் மற்றும் டி20) இதுவாகும். இதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியாவுக்காக அதிக சதங்கள் அடித்த 3-வது வீரர் என்ற ராகுல் டிராவிட்டின் வாழ்நாள் சாதனையை தகர்த்துள்ள ரோகித் அந்த இடத்தை பிடித்துள்ளார்.

அந்த பட்டியல்:-

1. சச்சின் - 100 சதங்கள்

2. விராட் கோலி - 81 சதங்கள்

3. ரோகித் -49 சதங்கள்

4. ராகுல் டிராவிட் - 48 சதங்கள்

Read Entire Article