பனாமா,: ஆபரேஷன் சிந்தூர் குறித்து பல்வேறு நாடுகளுக்கும் விளக்கமளிப்பதற்காக சென்றுள்ள குழுவில் காங்கிரஸ் எம்பி சசி தரூரும் இடம்பெற்றுள்ளார். பனாமாவில் பேசிய காங்கிரஸ் எம்பி சசி தரூர், ‘‘முதல் முறையாக இந்தியா-பாகிஸ்தான் எல்லைக்கட்டுப்பாடு கோட்டை மீறி சர்ஜிக்கல் ஸ்டிரைக்கை நடத்தியது முன் எப்போதும் நாம் செய்யாத ஒன்று” என்றார். இதற்கு காங்கிரஸ் கட்சியில் கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. இதற்கு பதிலளிக்கும் வகையில் சசி தரூர், தீவிரவாத தாக்குதல்களுக்கான பழிவாங்கல்கள் பற்றி மட்டுமே நான் தெளிவாகவும் வெளிப்படையாகவும் பேசினேன். முந்தைய போர்களை பற்றி அல்ல” என்று குறிப்பிட்டுள்ளார்.
The post சர்ஜிக்கல் ஸ்டிரைக் கருத்தால் சர்ச்சை; தீவிரவாத தாக்குதல்களுக்கான பழிவாங்கல் பற்றி மட்டுமே பேசினேன்: சசி தரூர் விளக்கம் appeared first on Dinakaran.