அலங்காநல்லூர், ஜன. 5: அலங்காநல்லூர் அருகே மேட்டுப்பட்டியில் உள்ள தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலை சில ஆண்டுகளாக ஆலை இயங்காமல் உள்ளது. இங்கு அலுவலக பணியாளர்கள் சிலரும், தனியார் செக்யூரிட்டிகளும் இருக்கின்றனர். இந்நிலையில் ஆலை வளாகத்தில் உள்ள பண்டக சாலையில் இருந்த பித்தளை பொருட்கள், மின் மோட்டார் உள்ளிட்ட ரூ 2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் திருடு போனது தெரியவந்தது. இதுகுறித்து அலுவலக மேலாளர் அய்யம்பெருமாள் அளித்த புகாரின் பேரில் அலங்காநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி அவற்றை திருடிய பெரிய ஊர்சேரியை சேர்ந்த ரஞ்சித்குமார் (38), விஸ்வநாதன்(33) ஆகியோரை கைது செய்தனர்.
The post சர்க்கரை ஆலையில் திருடிய 2 பேர் கைது appeared first on Dinakaran.